Monday 9 January 2012

தேசிய கீதம் 100


      நோபல் பரிசினை வென்ற வங்களத்தைச் சேர்ந்த கவிஞர் திரு இரவீந்திர நாத் தாகூர் அவர்களின் ஜன கன மண எனத் துவங்கும் கவிதையே நமது இந்திய நாட்டின் தேசிய கீதமாக இசைக்கப் பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

     நம்மில் மிகச் சிலர் மட்டுமே அறிந்த தேசியகீதம் பற்றிய மேலும் சில சுவையானத் தகவல்களை பண்பலை வானொலி மூலம் கேட்டறிந்ததை இங்கு தருகின்றேன்.

01.      கவிஞர் தாகூரின் பிரம்மஸ் துதி என்ற கவிதை மொத்தம் ஐந்து பத்திகளைக் கொண்டது. அதன் முதல் பத்தியை மட்டுமே நமது நாட்டின் தேசிய கீதமாக எடுத்து பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
02.      கொல்கத்தா நகரில் இருந்து வெளிவந்த தத்துவ போதினி பத்திரிக்கையில் பாரத் பிதா என்ற தலைப்பில் இந்த கவிதை முதன் முதலாக வெளிவந்தது.
03.      திருமதி மார்கிரெட் சசின் என்பவரால் இந்த ஐன கன மன பாடலுக்கு இசைவடிகம் முதன் முதலாகக் கொடுக்கப் பட்டது.
04.      27.12.1911 ல் ஒரு மாநாடு ஒன்றில் திருமதி சரளா தேவி சௌத்ராணி என்பவரால் முதன் முதலாக ஐன கன மண பாடல் பாடப்பட்டது, எனவே இப்பாடல் பாடப்பெற்று நூறாண்டுகள் முடிவுற்றுள்ளன.
05.      நமது பாராளுமன்றத்தில் சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் நமது நாட்டின் விடுதலைக்குப் பெரும் உதவி செய்தது என்று சிறப்பு செய்யப்பட்டது. அதே பாராளுமன்றத்தில் சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாகப் பாடுவதா? அல்லது, தாகூரின் ஐன கன மண பாடலை தேசிய கீதமாகப் பாடுவதா?  என்ற வினா எழுந்த பொழுது நாடு முழுவதம் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்ட பொழுது, பெரும்பான்மையான மாநிலங்கள் ஐனகன மண பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் 24.01.1950 ஆம் நாள் அப்பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப் பட்டது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஜன கன மண பாடலின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்
06.      இந்திய தேசிய கீதமான ஐன கன மண பாடலானது சரியாக 52 வினாடிகளில் பாடி முடிக்கப் பட வேண்டும் என்று விதியமைக்கப்பட்டுள்ளது.
07.      மிகவும் நெருக்கடியான காலத்தில் மட்டுமே பாடலின் முதல் இரு வரிகளையும், கடைசி இரு வரிகளையும் 20 வினாடிகளில் பாடப் பட வேண்டும் என்ற விதியும் உள்ளது.
08.      தாகூர் அவர்களின் மற்றொரு கவிதை நமது அண்டை நாடான வங்காள தேசத்தின் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது என்பதை அறியும் பொழுது ஒரே கவிஞரின் இரு வேறு கவிதைகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக பாடப்படுவது இந்த உலகில் வேறெங்கும் காணப்படாத சிறப்பான நிலை என்று கருதுகிறேன்.

நன்றி கோடை பண்பலை